தேசிய சூரா சபையின் உப குழுக்களுள் ஒன்றான சகவாழ்வு குழு 08.09.2016 வியாழக்கிழமையன்று இனங்களுக்கு இடையிலான நலுறவினையும் சகவாழ்வினையும் மேம்படுத்தும் நோக்கில் எதிர் கால செயற்திட்டங்களினை வகுக்கும் நோக்கிலும் பதுளை நகரிற்கு சகோ.எம்.ச்.எம். நியாஸ் தலைமையில் அஷ்-சேக். முனீர் முளவ்பர் (நளீமி) , சகோ.இஹ்திசாம் , மற்றும் லாபிர் மதனி (நளீமி) தமது உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
இதன் போது பதுளை ஜம்இய்யதுல் உலமா சபை , (YMMA) வை.எம்.எம்.எ. உறுப்பினர்கள் , பள்ளி நிர்வாகிகள் , அரசியல் நிர்வாகிகள் , அரசியல் பிரதிநிதிகள் , ஊர் முக்கியஸ்தர்கள் , சமூக நலன் விரும்ம்பிகள் , உட்பட அனைத்து தரப்பினர்ரையும் சந்தித்து கலந்துறையாடினர்.
மேலும் இவ்விஜயத்தின் போது அல்-அதான் பாடசாலை அதிபர் மற்றும் பதுளை ஜம்இய்யதுல் உலமா சபை அங்கத்தவர்களுடனும் விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
இங்கு அனைத்து தரப்பினரும் சகவாழ்வு உப குழு பிரிவின் வேலைத்திட்டங்களையும் செயற்பாடுகளையும் வரவேற்றதோடு தமது பூரண ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.