சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் (MICH) உடனான சந்திப்பு

தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தல், தேசிய ஷூரா சபையின் கடந்த கால, நிகழ் கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் பற்றிய விடயங்களை கலந்துரையாடல், அங்கத்துவ அமைப்புக்களை இணைத்துகொண்டு கூட்டான செயற்திட்டங்களை மேற்கொள்ளல் போன்ற இலக்குகளை அடிப்படையாகக்கொண்டு தனது அங்கத்துவ அமைப்புக்களின் தலைமைத்துவங்களுடனான விஷேட சந்திப்புகளை தேசிய ஷூர சபை மேற்கொண்டு வருகின்றது.

அத்தொடரில் அதன் அங்கத்துவ அமைப்பில் ஒன்றான சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்துடனான சந்திப்பு 19.10.2016 அன்று கொழும்பு பிரிஸ்டல் வீதியில் அமைந்துள்ள சோனக இஸ்லாமிய கலாசார நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன் போது தேசிய ஷூரா சபையின் தலைவர் ஜே.தாரிக் மஹ்மூத் , உபசெயலாளர் எம்.டி. தஹாசிம் , பொருளாளர் மௌலவி ஸியாத் இப்ராஹீம் நிறைவேற்று குழு உறுபினர்களான மௌலவி.தஸ்லீம் , அஷ்.ஷேக்.அப்துல் அஸீம் போன்றோரும் . சோனக இஸ்லாமிய கலாசார நிலைய அங்கத்தவர்களான தலைவர் ஒமர் காமில் ,  சகோ.அஷ்ரப் ஜமீல்  மற்றும் எஸ்.ஏ. முர்ஷித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பல முக்கியமான விடயங்கள் கலந்தாலோசனை செய்யப்பட்டது. குறிப்பாக தேசிய ஷூரா சபையின் தோற்றம், செயற்பாடுகள், ஏனைய அமைப்புகளுடனான உறவுகள் மற்றும் அதன் எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் முன்னால் அரசியல் தலைவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட அரசில் சார்பற்ற நிறுவனம் சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் இந்நிலையத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அளப்பரிய சேவைகளை அவர்கள் முன்வைத்தனர். முக்கியமாக முதன் முதலாக அல்-குர்ஆன் மற்றும் ஸஹிஹுல்- புஹாரி ஹதீஸ் கிரந்தத்தை சகோதர மொழியான சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்துள்ளனர்.

மேலும் முஸ்லிம் கலாசார விழுமியங்களை பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்துவதோடு சில வரலாற்று நிகழ்வுகளையும்  சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின்  தலைவர் நினைவூட்டினர்.

கலந்துரையாடலின் போது அவர்; அவர்களால் மேற்கொள்ள முடியாத விடையங்களை தேசிய ஷூரா சபை  மேற்கொள்வதாகவும் அதற்கு அவர்கள்  முழு ஆதரவையும் ஒத்துளைப்பையும் வழங்குவதாக தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top