தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புகளில் ஒன்றான ஜமாதுல் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியா மற்றும் தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவுக்கும் இடையிலான சந்திப்பொன்று 25.10.2016 அன்று குருநாகல், பரகஹதெனிய தாருத் தௌஹீத் அஸ்ஸலபிய்யா கலாசாலையின் பிரதான கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியா அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தி அவ்வமைப்பின் செயலாளர் ஏ. எல். கலீலுர் ரஹ்மான், டாக்டர். அம்ஜத் ராசிக், அஷ்.ஷேக். இஸ்மாயில் ஸலபி , ஜனாப். ஹித்மதுல்லாஹ், தாருத் தௌஹீத் ஸலபிய்யா அரபுக் கலாசாலையின் பிரதி அதிபார் எஸ்.யூ. ஸமீன் மற்றும் அஷ்.ஷேக். அன்சார் ( ரியழி ) ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தேசிய ஷூரா சபையின் சகவாழ்க்கான உபகுழுவினை பிரதிநிதித்துவப்படுத்தி உபகுழுவின் தலைவர் டாக்டர். ஸைபுல் இஸ்லாம், உறுப்பினர்களான மௌலவி தஸ்லீம் மௌலவி, அஷ்.ஷேக். முனீர் முளவ்பர் ( நளிமீ ) , அஷ்.ஷேக். அலாவுதீன் (ஸலபி ) , அஷ்.ஷேக். லாபிர் மதனி மற்றும் ஜனாப் .பவாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது தேசிய ஷூரா சபையின் தோற்றம், அதன் முக்கியத்துவம் மற்றும் அதன் கடந்த கால, எதிர் கால செயற்பாடுகள் பற்றிய அறிமுகம் வழங்கப்பட்டதுடன் தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான மூலோபாய திட்டமிடல் (Strategic way forward ) பற்றி விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இத்திட்டங்களுக்கு தமது அமைப்பின் பூரண ஒத்துழைப்பை நல்குவதாக சகோ. கலீலுர் ரஹ்மான் அவர்கள் தெரிவித்தார்.
அத்தோடு தேசிய ஷூரா சபையின் சகவாழ்வுக்கான உபகுழுவினால் 7 கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதமொன்றில் ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவின் செயலாளர் ஜனாப். கலீலுர் ரஹ்மான் அவர்களிடம் சகவாழ்வுக்கான உப குழுவின் தலைவர் டாக்டர். ஸைபுல் இஸ்லாம் அவர்களால் வழங்கப்பட்டது.