2017 வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் தேர்தல் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்டு, அவை பற்றிய விபரங்கள் www.slelections.gov.lk இல் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி பதிவில் தங்களது விபரங்கள் இடம்பெறாதவர்கள், எதிர்வரும் 06/09/2017 ஆம் திகதிக்கு முன்னர் அதுபற்றி தத்தமது மாவட்ட தேர்தல்கள் காரியாலயங்களுக்கு எழுத்து மூலம் அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கிராம உத்தியோகத்தர்களிடமுள்ள இதற்கான முறையீட்டு விண்ணப்பப்படிவத்தின் மூலம் அல்லது கடிதம் ஒன்றின் மூலம் இம்முறையீடுகளை மேற்கொள்ள முடியும். இதன் பிரதியொன்றை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைத்தல் சிறந்தது.
இது தொடர்பான தேசிய ஷூரா சபையின் பொது அறிவித்தல்! உடன் பகிரவும்!