“எல்லை மீள்நிர்ணயமும் இலங்கை தேர்தல் முறைமையும்” – பகிரங்க சொற்பொழிவு

ER 2

தேசிய சூரா சபை ஏற்பாடு செய்த “எல்லை மீள்நிர்ணயமும் இலங்கை தேர்தல் முறைமையும்” எனும் தலைப்பிலான விஷேட பகிரங்க சொற்பொழிவு நேற்று (24) மாலை கொழும்பு ஜம்இய்யத்துஷ் ஷபாப் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் விஷேட பேச்சாளராக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். முஹம்மத் கலந்து சிறப்பித்தார்.

பேச்சாளர் எல்லை மீள்நிர்ணயம், இலங்கைத் தேர்தல் முறைமை என்பன பற்றி சிறந்த விளக்கங்களை அளித்ததுடன் இறுதியில் மேற்படி விடயங்கள் தொடர்பாக பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலான கலந்துரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தேசிய ஷூரா சபை சமூகத்தின் நடைமுறை விவாகரங்களை மையமாக வைத்து, பல்வேறு துறைகளிலும் உள்ள துறைசார் நிபுணர்கள், புத்திஜீவிகளை அழைத்து பகிரங்க சொற்பொழிவுகளை மாதாந்தம் நடாத்தத் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ER ER 4 ER 3

ER 2 ER 1

 

Scroll to Top