ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை இலங்கை அரசாங்கம் கண்டிக்க வேண்டும்

yynj

கடந்த வெள்­ளிக்­கி­ழமை (ஜூன் 13) இரவு ஈரான் மீது இஸ்ரேல் நடத்­திய கார­ண­மற்ற பல சுற்றுத் தாக்­கு­தல்­களைக் கண்­டித்­துள்ள தேசிய சூரா சபை, இஸ்­ரேலின் தாக்­கு­தல்­களை இலங்கை அரசாங்கம் கண்­டிக்க வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யுள்ளது..

இது தொடர்பில் தேசிய சூரா சபை வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

ஈரானின் மின் உற்­பத்தி செய்யும் இரா­ணுவ நோக்­க­மற்ற அணு­சக்தி நிலை­யங்கள் மீது இஸ்ரேல் நடத்­திய ஆபத்­தான தாக்­கு­தல்­களை தேசிய சூரா சபை வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது. இந்தத் தாக்­கு­தல்கள் பரந்த அளவில் கதிர்­வீச்சு கசிவை ஏற்­ப­டுத்தி, அப்­பி­ராந்­தி­யத்தில் மில்­லியன் கணக்­கான மக்­க­ளுக்கு மர­ணத்­தையும் பேர­ழி­வையும் விளை­வித்­தி­ருக்கக் கூடும். பிபிசி குறிப்­பிட்­டுள்­ள­தன்­படி, இஸ்­ரேலின் இந்தத் தாக்­கு­தல்­களை அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் டிரம்ப் “சிறப்­பா­னது” என்று பாராட்­டி­யுள்­ளமை கண்­டிக்­கத்­தக்­க­தாகும். இது நிலை­மையை மேலும் மோச­மாக்­கு­வ­தாக அமைந்­துள்­ளது.

அணு­வா­யு­தங்கள் கொண்ட இஸ்ரேல், அணு­வா­யு­த­மற்ற ஈரானின் மீது முன்­ன­றி­விக்­கப்­ப­டாத தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளது. ஐக்­கிய நாடுகள் சபையின் சர்­வ­தேச அணு­சக்தி முக­வ­ர­கத்தால் (IAEA) இது­வரை பேச்­சு­வார்த்­தைகள் மூலம் கையா­ளப்­பட்டு வந்த அணு­சக்தி தொடர்­பான பிரச்­சி­னை­களை ஒரு கார­ண­மாகக் கொண்டு, தேவை­யில்­லாத ஒரு போரை ஈரானின் மீது இஸ்ரேல் தூண்­டி­விட்­டுள்­ளது.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இஸ்ரேல் ஈரான் மீது நடத்­திய மிகவும் ஆபத்­தான தாக்­குதல், 2003 ஆம் ஆண்டு ஈராக் மீதான படை­யெ­டுப்பை விட மோச­மா­னது. அப்­போது அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோர்ஜ் புஷ்ஷும், பிரிட்டிஷ் பிர­தமர் டோனி பிளே­யரும், ஈராக்கின் பாத் கட்சித் தலைவர் சதாம் ஹுசைன் பேர­ழிவு தரும் ஆயு­தங்­களை (WMD) வைத்­தி­ருப்­ப­தா­கவும் சதாமின் பேர­ழிவு ஆயு­தங்­களால் இங்­கி­லாந்து 45 நிமி­டங்­களில் அழிக்­கப்­படும் என பொய்­யான குற்­றச்­சாட்டை முன்­வைத்து ஈராக் மீது படை­யெ­டுத்­தனர்.

இஸ்­ரேலின் தாக்­கு­தல்­களை இலங்கை அரசு கண்­டிக்க வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்ள தேசிய சூரா சபை, உலக அமைதி மற்றும் பொரு­ளா­தார நிவா­ரண நலன்­க­ளுக்­காக சர்­வ­தேச அணு­சக்தி முக­வ­ரகம் (IAEA) மூலம் பேச்­சு­வார்த்­தை­களை ஊக்­கு­விக்­கு­மாறும் கோரி­யுள்­ளது. மேலும் சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் அண்­மைய ஆலோ­ச­னைக்கு முர­ணாக, ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பலஸ்­தீ­னியப் பகு­தி­களில் இஸ்­ரே­லிய குடி­யேற்­றக்­கா­ரர்­க­ளுக்கு சட்­ட­வி­ரோ­த­மாக உத­வு­வ­தற்­காக, பலஸ்­தீ­னி­யர்­க­ளுக்குப் பதி­லாக முந்­தைய அர­சாங்­கத்தால் அனுப்­பப்­பட்ட 20,000 இலங்­கை­யர்­களை உட­ன­டி­யா­கவும் பாது­காப்­பா­கவும் நாட்­டிற்குத் திருப்­பி­ய­ழைக்­கு­மாறும் தேசிய சூறா சபை அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

ஈரானின் மீது இஸ்ரேல் பல சுற்றுத் தாக்­கு­தல்­களை நடத்தி, ஆத்­தி­ர­மூட்டும் வகையில் குண்­டு­வீ­சி­யதை சவுதி அரே­பியா, கத்தார், ஐக்­கிய அரபு அமீ­ரகம், ஜோர்தான், நியூ­சி­லாந்து, அவுஸ்­தி­ரே­லியா, சீனா, ரஷ்யா, ஐரோப்­பிய ஒன்­றியம் (EU) மற்றும் பல நாடுகள் கண்­டித்து விமர்­சித்­தி­ருப்­பதை தேசிய சூரா சபை வர­வேற்­றுள்­ளது.

இந்தத் தாக்­கு­தலை “ஈரான் இஸ்­லா­மிய குடி­ய­ரசு மீதான சியோ­னிச ஆக்­கி­ர­மிப்பு” எனக் கண்­டித்­துள்­ள­தையும் “சியோ­னிச அர­சு­ட­னான உற­வு­களைத் துண்­டிக்­கு­மாறும்” “மத்­திய கிழக்கில் உள்ள இலங்கைத் தொழி­லா­ளர்­களைப் பாது­காக்க” தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறும் இலங்கை அர­சாங்­கத்தை இலங்கை கம்­யூனிஸ்ட் கட்சி வலி­யு­றுத்­தி­யுள்­ளதை தேசிய சூறா சபை வர­வேற்­றுள்­ளது.

ஈரான் மீது இஸ்ரேல் நடத்­திய தாக்­கு­தல்கள் தற்­போது ஒரு பீப்பாய் 8 அமெ­ரிக்க டொல­ரா­க­வுள்ள உலக கச்சா எண்ணெய் விலையை சில மணி நேரங்­க­ளி­லேயே பீப்­பாய்க்கு சுமார் 10 அமெ­ரிக்க டொலர்கள் வரை உயர்த்­தி­யுள்­ளன. இந்த விலை உயர்வு, இலங்கை போன்ற சிர­மப்­படும் பொரு­ளா­தா­ரங்கள் மற்றும் ஏனைய மூன்றாம் உலக நாடு­களின் பொரு­ளா­தார மீட்­சியை கடு­மை­யாக அச்­சு­றுத்­து­வ­தாக உள்­ளது.

இதே­வேளை, எந்­த­வொரு தவிர்க்க முடி­யாத தற்­காப்பு பதி­ல­டி­க­ளிலும் ஈரான் கட்­டுப்­பாட்­டுடன் செயல்­பட வேண்டும் என தேசிய சூரா சபை வலி­யு­றுத்­தி­யுள்­ளது. இஸ்ரேல் மற்றும் அமெ­ரிக்கா போன்ற இஸ்­ரேலின் சக்­தி­வாய்ந்த ஆத­ர­வா­ளர்கள், தங்கள் அணு ஆயு­தங்­களின் மீது கட்­டுப்­பாடு கொண்ட வல­து­சாரி தீவி­ர­வாதத் தலை­வர்­களால் வழி­ந­டத்­தப்­ப­டு­கி­றார்கள். இத்­த­கைய தலை­வர்கள், பார­சீ­க -­அ­ரபு மத்­திய கிழக்கில் ஹிரோ­ஷிமா மற்றும் நாக­சாகி நிகழ்­வு­களை எளிதில் மீண்டும் நடத்­தக்­கூடும். இதன் மூலம் மில்­லியன் கணக்­கான அப்­பாவி பொது­மக்­களைக் கொல்­வ­தோடு, மேலும் பல மில்­லியன் மக்­களை வாழ்நாள் முழு­வதும் ஊன­மாக்­கக்­கூடும். எனவே, நிலை­மையின் தீவி­ரத்தைக் கருத்தில் கொண்டு, ஈரான் மிகுந்த கட்­டுப்­பாட்­டுடன் செயல்­பட வேண்டும் என தேசிய சூரா சபை கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

Scroll to Top