இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மஸ்ஜித்களில் கர நடுகை நிகழ்வுகள்:

fdhu

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ஷூரா சபை நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள மஸ்ஜித்களில் மரம் நடுகை நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. அந்தவகையில், உங்களது பிரதேச மஸ்ஜித்களில் மர நடுகை நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு உங்களது அமைப்பின் ஒத்துழைப்பை தேசிய ஷூரா சபை வேண்டிநிற்கிறது.

எனவே, உங்களது பிரதேச மஸ்ஜித்களின் நிருவாகிகளுக்கு இது பற்றி அறிவித்து, இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 2016 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி அம்மஸ்ஜித்களில் மர நடுகை நிகழ்வுகளை சிறப்பாக ஏற்பாடு செய்ய உதவுமாறு பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.

இம்மர நடுகை வேலைத்திட்டத்தை உங்கள் பிரதேசத்தில் ஏற்பாடு செய்வதில் எமக்கு ஒத்துப்பு வழங்க உங்கள் அமைப்பு சார்பாக ஒருவரை நியமித்து அவரின் பெயர், தொலைபேசிஇலக்கம், உங்கள் அமைப்பின் பெயர், முகவரி என்பவற்றை 077-0643768 எனும்இலக்கத்திற்கு SMS அல்லது WHATSAPP செய்யவும்.

 

Scroll to Top